பிப்ரவரி, 2023 | நமது அனுதின மன்னா Tamil Our Daily Bread

Archives: பிப்ரவரி 2023

banner image

அவர் தம்முடைய ஜீவனை நமக்காகக் கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம். 1 யோவான் 3:16

ஒரு கோடைக்கால ஆய்வு நிகழ்ச்சியின் போது, சுவிட்சர்லாந்தில் உள்ள ஆல்பைன் மலையில் ஏற விரும்பிய ஒரு சிறுவனைப் பற்றிய புத்தகத்தை என் மகன் படித்தான். இந்த இலக்குக்கான பயிற்சியே அவனது பெரும்பாலான நேரத்தை ஆக்கிரமித்தது. இறுதியாக அவன் மலையேறப் புறப்பட்டபோது, திட்டமிட்டபடி காரியங்கள் நடக்கவில்லை. மலை சாய்வின் மேலே, அவனது ஒருவர் அணி வீரர் நோய்வாய்ப்பட்டார். சிறுவன் தனது இலக்கை அடைவதற்குப் பதிலாக, அவருக்கு உதவி செய்ய அவருடன் தங்க…

banner image

ஆபிரகாமுக்கு இரண்டு குமாரர் இருந்தார்கள் என்று எழுதியிருக்கிறது; ஒருவன் அடிமையானவளிடத்தில் பிறந்தவன், ஒருவன் சுயாதீனமுள்ளவளிடத்தில் பிறந்தவன். கலாத்தியர் 4:22

கலாத்தியர்களின் இந்த அத்தியாயத்தில் பவுல் பாவத்தைப் பற்றிப் பேசவில்லை. ஆனால் ஆவிக்குரியதற்கும், ஜென்ம சுபாவத்திற்குமிடையே உள்ள உறவைப் பற்றிப் பேசுகிறார். தியாகத்தின் மூலம்தான் ஜென்ம சுபாவத்தை ஆவிக்குரியதாக மாற்ற முடியும். இது இல்லாமல் ஒரு நபர் பிளவுபட்ட வாழ்க்கையை நடத்துவார். ஜென்ம சுபாவத்தைப் பலியிட வேண்டும் என்று தேவன் ஏன் கோரினார்? தேவன் அதைக் கோரவில்லை. இது தேவனின் பரிபூரண சித்தம் அல்ல, மாறாக அவருடைய…

banner image

மிகவும் சந்தோஷமாய் நான் உங்கள் ஆத்துமாக்களுக்காகச் செலவுபண்ணவும் செலவுபண்ணப்படவும் விரும்புகிறேன். 2 கொரிந்தியர் 12:15

ஒருதரம், "பரிசுத்த ஆவியினாலே தேவ அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறபடியால்" (ரோமர் 5:5); பிறரின் வாழ்க்கையில் இயேசு கிறிஸ்துவின் ஆர்வங்கள் மற்றும் நோக்கங்களுடன் நாம் வெளிப்படையாகவே நாம் ஒன்றுவதைக் காணத் தொடங்குகிறோம். மேலும் இயேசு ஒவ்வொரு தனி நபர் மீதும் அக்கறை கொண்டுள்ளார். நம்முடைய சொந்த நலன்கள் மற்றும் விருப்பங்களால் வழிநடத்தப்படுவதற்குக் கிறிஸ்தவ சேவையில் நமக்கு உரிமை இல்லை. உண்மையில், இது இயேசு கிறிஸ்துவுடனான நமது உறவின் மிகப்பெரிய சோதனைகளில்…

banner image

நீங்கள் அவருடைய ஆவியினாலே உள்ளான மனுஷனில் வல்லமையாய்ப் பலப்படவும் (வ.16). எபேசியர் 3:14-21

கோடீஸ்வர நிறுவனர்களான பில் கேட்ஸ் மற்றும் வாரன் பஃபெட் ஆகியோரால் 2009 இல் உருவாக்கப்பட்ட "தி கிவிங் ப்லெட்ஜ்", உலகின் பெரும் செல்வந்தர்கள் தங்கள் பணத்தில் பெரும்பகுதியை மற்றவர்களுக்கு கொடுத்து உதவுமாறு ஊக்குவிக்கும் ஒரு செயல்திட்டமாகும். பஃபெட், தானே தலைமை தாங்குகிறார். மேலும் அவர் இறக்கும் நேரத்தில் தனது செல்வத்தில் 99 சதவீதத்தை நன்கொடையாக வழங்க திட்டமிட்டுள்ளார். இது நம்பமுடியாத தாராளமான செயல்! ஆனால் அவரது தற்போதைய சொத்து மதிப்பு 72.3…

banner image

அவர்கள் பாவத்தை மன்னித்தருளுவீரானால் மன்னித்தருளும்; இல்லாவிட்டால் நீர் எழுதின உம்முடைய புஸ்தகத்திலிருந்து என் பேரைக் கிறுக்கிப்போடும். யாத்திராகமம் 32:21-32

எகிப்து சிறையில் 400 நாட்களைக் கழித்த ஆஸ்திரேலிய பத்திரிகையாளர் விடுதலையானபோது பலவகையான உணர்ச்சிகளை வெளிப்படுத்தினார். தனது விடுதலைக்கான நிம்மதியை ஒப்புக்கொண்டாலும், தான் பிரிந்து செல்லும் நண்பர்களும் இன்னும் எவ்வளவு காலம் சிறையிலிருப்பார்களென்று தெரியாததால் அவர்களுக்காக ஆழ்ந்த கவலையுடன்தான் தனது சுதந்திரத்தை ஏற்றுக்கொண்டதாகக் கூறினார். தன்னுடன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சக நிருபர்களிடமிருந்து விடைபெறுவது மிகவும் கடினமாக இருப்பதாக அவர் கூறினார்.

நண்பர்களை விட்டுச் செல்வதை நினைத்து…

banner image

ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம்,சாந்தம், இச்சையடக்கம். கலாத்தியர் 5:22-23

பிப்ரவரி 2020 இல், கோவிட்-19 நெருக்கடி துவங்கிய காலம். ஒரு செய்தித்தாள் கட்டுரையாளரின் கரிசனை என் கவனத்தை ஈர்த்தது. "நாம் விருப்பத்துடன் தனிமைப்படுத்திக் கொள்வோமா? மற்றவர்கள் நோய்வாய்ப்படாமல் இருக்க நமது வேலை, பயணம் மற்றும் கடையில் வாங்கும் பழக்கங்களை மாற்றிக் கொள்வோமா?" என்று வியந்தார். மேலும் "இது வெறும் மருத்துவம் சார்ந்த சோதனை மட்டுமல்ல, மற்றவர்களுக்காக நம்மை இழக்கும் நமது விருப்பத்திற்குமான சோதனையும்தான்" என்று அவர் எழுதினார். திடீரென்று…

banner image

பிதாவாகிய தேவனாலும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக; அவர் நம்மை இப்பொழுதிருக்கிற பொல்லாத பிரபஞ்சத்தினின்று விடுவிக்கும்படி நம்முடைய பிதாவாகிய தேவனுடைய சித்தத்தின்படியே நம்முடைய பாவங்களுக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார். கலாத்தியர் 1:3-4

20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஒரு புதுமையான ஆங்கிலப் பத்திரிகையாளரான டபிள்யூ.டி. ஸ்டெட், சர்ச்சைக்குரிய சமூகப் பிரச்சினைகளைப் பற்றி எழுதுவதில் பேர்பெற்றவர். அவர் வெளியிட்ட இரண்டு கட்டுரைகள், பயணிகளுக்கான உயிர்காக்கும் படகுகள் போதிய விகிதத்திலின்றி கப்பல்கள் இயக்கப்படுவதால் ஏற்படும் ஆபத்தை எடுத்துரைத்தது. அதற்கேற்றாற்போல், ஏப்ரல் 15, 1912 இல் வடக்கு…

தியாகம்

அறிமுகம்

தியாகம் என்பது கிறிஸ்தவத்தின் மையக் கருப்பொருளாகும், இது இயேசு கிறிஸ்து சிலுவையில் செய்த இறுதி தியாகத்தில் வேரூன்றியுள்ளது. வரலாறு முழுவதும் பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் மதங்களில் இது குறிப்பிடத்தக்க பங்காற்றியுள்ளது. கிறிஸ்தவர்களாகிய நாம், கிறிஸ்துவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, நம்முடைய சொந்த வாழ்க்கையில் தியாகங்களைச் செய்ய அழைக்கப்படுகிறோம். ஊழியங்களின் வாயில் மற்றவர்களுக்காக நம்முடைய சொந்த விருப்பங்களை விட்டுக்கொடுக்கவும், அல்லது நம் விசுவாசத்திற்காக உபத்திரவப்படவும் கூட அழைக்கப்படுகிறோம்.

தனிநபர் முக்கியத்துவத்தையும், சுய திருப்தியையும் எப்போதும் மதிக்கும் இவ்வுலகில் தியாகம் என்ற கருத்தைப் புரிந்துகொள்வது கடினம். இருப்பினும் கிறிஸ்தவர்களாகிய நாம்,…

தொடர்புடைய தலைப்புகள்

> odb

அன்பினிமித்தம்

மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்பது என்பது உங்களை உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் பலப்படுத்துகிறது. ஆனால் உயர்நிலை பள்ளியில் படிக்கும் ஒரு வீராங்கனைக்கு ஓட்டப்பந்தயம் என்றால் தள்ளிக்கொண்டுபோவது என்று விளங்கியிருக்கிறது. ஒவ்வொரு பயிற்சியின்போதும், பதினான்கு வயது நிரம்பிய சூசன் பெர்க்மான் தன்னுடைய மூத்த சகோதரன் ஜெஃப்ரியை  அவனுடைய சக்கர நாற்காலியில் வைத்து தள்ளிக்கொண்டே ஓடுவாள். ஜெஃப்ரி பிறந்து இருபத்தி இரண்டு மாதத்தில் அவனுக்கு மாரடைப்பு ஏற்பட்டு, அதின் விளைவாய் கடுமையான மூளை பாதிப்பு மற்றும் பெருமூளை வாதம் ஏற்பட்டது. இன்று சூசன் தன்னுடைய சகோதரனுக்காக அவளுடைய தனிப்பட்ட ஓட்டப்பந்தய இலக்குகளை தியாகம் செய்துவிட்டாள். ஆகையினால் ஜெஃப்ரியும் ஓட்டப்பந்தயங்களில் கலந்துகொள்ளமுடிகிறது. இந்த தியாகமான அன்பு ஆச்சரியப்படவைக்கிறது.  
பவுல் அப்போஸ்தலர் “ஒருவர்மேலொருவர் பட்சமாயிருங்கள்” என்று எழுதும்போது இந்த அன்பையும் தியாகத்தையும் சிந்தையில் வைத்தே எழுதியிருக்கிறார் (ரோமர் 12:10). ரோமத் திருச்சபையில் இருக்கும் விசுவாசிகள் பொறாமை, கோபம் மற்றும் ஆழமான கருத்து வேறுபாடுகளுடன் போராடுகிறார்கள் என்பதை பவுல் அறிந்திருந்தார் (வச. 18). எனவே, தெய்வீக அன்பு அவர்களின் இதயங்களை ஆள அனுமதிக்கும்படி அவர் அவர்களை ஊக்குவித்தார். கிறிஸ்துவின் அன்பில் வேரூன்றிய இந்த வகையான அன்பு, மற்றவர்களுக்கு மேன்மையான நன்மையை கொடுக்க பிரயாசப்படும். அது நேர்மையானதாகவும், தயாள குணம் படைத்ததாகவும் வெளிப்படும் (வச. 13). இந்த வழியில் அன்பு செலுத்துகிறவர்கள் தங்களைக் காட்டிலும் மற்றவர்களை கனம் பெற்றவர்களாய் கருதுவார்கள் (வச. 16).  
கிறிஸ்தவர்களாகிய நாம், மற்றவர்களுக்கு துணைபுரிந்து ஓட்டத்தை நேர்த்தியாய் ஓடச்செய்து இலக்கை அடையச்செய்யும் அன்பின் ஓட்டத்தை ஓடிக்கொண்டிருக்கிறோம். அது கடினமானதாய் தெரிந்தாலும் அது இயேசுவுக்கு கனத்தைக் கொண்டுவருகிறது. அன்பினிமித்தம் நாம் அவரை சார்ந்துகொண்டு, மற்றவர்களை நேசிக்கவும் அவர்களுக்கு சேவை செய்யவும் பிரயாசப்படுவோம்.  

எனது வாகனம் ஓட்டும் திறமை எப்படி?

“ஐயோ!” எனக்கு முன்பாக போய்க்கொண்டிருந்த பழுதுபார்க்கும் லாரி திடீரென்று திரும்பியதால் நான் அலறினேன்.  
அந்த வாகனத்தில் பின்புறம் “எனது வாகனம் ஓட்டும் திறமை எப்படி?” என்று கேட்டு அதற்கு கீழ் தொலைபேசி எண் கொடுக்கப்பட்டிருந்தது. அந்த எண்ணிற்கு தொடர்புகொண்டேன். நான் ஏன் அழைக்கிறேன் என்று ஒரு பெண் என்னிடம் கேட்டார். நான் என் விரக்தியை கோபமாய் வெளிப்படுத்தினேன். டிரக்கின் நம்பரை குறித்துக்கொண்டாள். பின்னர் அவள், “எப்போதும் நன்றாக வாகனம் ஓட்டும் ஒருவரைக் குறித்து சொல்லுவதற்கும் நீங்கள் எங்களை அழைக்கலாம்” என்று சோர்வுடன் சொன்னாள். 
அவளுடைய அந்த சோகமான வார்த்தைகள் என்னை தடுமாறச் செய்தது. என் தவறை நான் உணர்ந்தேன். எனக்கு நியாயம் வேண்டும் என்பதற்காக, நான் பேசிய கோபமான வார்த்;தைகள் அந்த கடினமான வேலை செய்யும் பெண்ணை எந்த அளவிற்கு காயப்படுத்தியிருக்கவேண்டும் என்று யோசித்தேன். என்னுடைய விசுவாசத்திற்கும் கனிகொடுக்கும் ஜீவியத்திற்கும் இடையில் இருக்கும் தொடர்பு அற்றுபோனதாக அவ்வேளையில் நான் உணர்ந்தேன்.  
நம்முடைய செய்கைகளுக்கும் நம்பிக்கைகளுக்கும் இடையில் இருக்கும் இடைவெளியைத் தான் யாக்கோபு நிருபம் வெளிப்படுத்துகிறது. யாக்கோபு 1:19-20இல் “ஆகையால், என் பிரியமான சகோதரரே, யாவரும் கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையாயும், கோபிக்கிறதற்குத் தாமதமாயும் இருக்கக்கடவர்கள்; மனுஷருடைய கோபம் தேவனுடைய நீதியை நடப்பிக்கமாட்டாதே” என்று வாசிக்கிறோம். மேலும் அவர், “நீங்கள் உங்களை வஞ்சியாதபடிக்குத் திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல, அதின்படி செய்கிறவர்களாயும் இருங்கள்” (வச. 22) என்றும் ஆலோசனை கூறுகிறார்.  
நாம் யாரும் நேர்த்தியானவர்கள் இல்லை. சில வேளைகளில் நம்முடைய வாழ்க்கை என்னும் வாகனத்தை ஓட்டும்போது, நம்முடைய கடினமான வாழ்க்கைப் பாதையில் அவர் நம்முடைய கடினமான சுபாவங்களை மாற்றுவார் என்று நம்பி அவரை சார்ந்துகொள்ள முற்படுவோம்.

தேவன் பார்க்கிறார், புரிந்துகொள்கிறார், பாதுகாக்கிறார்

சில நேரங்களில், நாள்பட்ட வலி மற்றும் சோர்வுடன் வாழ்வது என்பது வீட்டில் தனிமைபடுத்தப்பட்டு தனக்கு யாருமில்லை என்ற உணர்வை ஏற்படுத்திவிடுகிறது. தேவனோ அல்லது மற்றவர்களோ என்னை பார்க்கவில்லை என்பதை நான் உணர்ந்தேன். எனது நாயுடன் அதிகாலையில் நான் ஜெபநடை ஏறெடுக்கும்போது, இதுபோன்ற உணர்வுகள் என்னை வெகுவாய் பாதித்தது. தூரத்தில் காற்று நிரப்பப்பட்ட பெரிய பலூன் பறந்து சென்றுகொண்டிருந்ததைப் பார்த்தேன். அதில் பயணம் செய்யும் நபர்கள் பூமியை உயரத்திலிருந்து பார்த்து ரசிக்கமுடியும். நான் என் அயலவர்களின் வீடுகளை நடந்து கடந்தபோது, பெருமூச்சு விட்டேன். அந்த மூடிய கதவுகளுக்குப் பின்னால் எத்தனை பேர் கண்ணுக்குத் தெரியாதவர்களாகவும் முக்கியமற்றவர்களாகவும் உணர்கிறார்கள்? நான் என் நடைப்பயணத்தை முடித்தவுடன், நான் அவர்களைப் பார்க்கிறேன், அவர்களைக் கவனித்துக்கொள்கிறேன் என்பதை என் அண்டை வீட்டாருக்குத் தெரியப்படுத்த எனக்கு வாய்ப்புகளைத் தரும்படி தேவனிடம் கேட்டேன். அவரும் அப்படித்தான். 
தேவன் எத்தனை நட்சத்திரங்களைப் படைத்தார் என்னும் தொகை அவருக்கு தெரியும். ஒவ்வொரு நட்சத்திரங்களையும் அவர் பேர்சொல்லி அழைப்பது (சங்கீதம் 147:5), சிறு விஷயங்களுக்கும் அவர் கொடுக்கும் முக்கியத்துவத்தைக் காண்பிக்கிறது. அவருடைய வல்லமை, ஞானம், பகுத்தறிவு ஆகியவைகள் காலவரம்பற்றவைகள் (வச. 5). 
தேவன் ஒவ்வொரு அவிசுவாசத்தின் அழுகையையும் கேட்கிறார்; ஒவ்வொரு அமைதியான கண்ணீரையும் அவர் தெளிவாகக் காண்கிறார். ஒவ்வொரு திருப்தி பெருமூச்சையும் அவர் அறிந்திருக்கிறார். நாம் எப்போது தடுமாறுகிறோம், எப்போது வெற்றிபெறுகிறோம் என்பதை அவர் பார்க்கிறார். நம்முடைய ஆழ்ந்த அச்சங்களையும், நமது உள்ளார்ந்த எண்ணங்களையும், நம்முடைய பயங்கரமான கனவுகளையும் அவர் புரிந்துகொள்கிறார். நாம் எங்கு இருந்தோம், எங்கு செல்கிறோம் என்பது அவருக்குத் தெரியும். நம் அண்டை வீட்டாரைப் பார்க்கவும், கேட்கவும், நேசிக்கவும் தேவன் நமக்கு உதவுவதால், நம்மைப் பார்க்கவும், புரிந்து கொள்ளவும், கவனித்துக் கொள்ளவும் அவரை முழுமையாய் நம்பலாம்.